Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தையல் ஆசிரியை தற்கொலை: மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (18:13 IST)
அரசு பள்ளியில் பணிபுரிந்த தையல் ஆசிரியை திடீரென தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்ற பகுதியில் அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியை நாகேஸ்வரி என்பவர் பணி செய்து வந்தார். அவரை தலைமை ஆசிரியரும் பணியாற்ற அனுமதிக்காமல் பல மணி நேரம் காக்க வைத்து வைத்து திருப்பி அனுப்பி உள்ளதாக தெரிகிறது 
 
மேலும் பல்வேறு வகையில் டார்ச்சர் செய்ததால் மன உளைச்சல் அடைந்த தையலாசிரியர் நாகேஸ்வரி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பள்ளிக்கு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் 
 
இதனை அடுத்து தலைமை ஆசிரியையை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்த பின்னரே உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments