Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ பாஸ் எப்போது வரை நடைமுறையில் இருக்கும் தெரியுமா...??

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (11:10 IST)
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் நடைமுறையில் உள்ள இ பாஸ் குறித்து பேட்டியளித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால்  பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
 
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, இ பாஸ் எடுக்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படுமே தவிற ரத்து செய்யப்படாது என கூறிவிட்டார். இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 
இ பாஸ் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் இருக்கும் வரை இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments