Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகள்; 300 கோடி ஒதுக்கி அரசாணை!

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (10:58 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கின. டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. தமிழகம் முழுவதும் மழையால் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.300 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு 132 கோடி ரூபாயும், நகராட்சி நிர்வாகத்திற்கு 62 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 20 கோடி ரூபாயும், நெடுஞ்சாலை துறைக்கு 17 கோடி ரூபாயும், மின்சாரத்துறைக்கு 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments