தமிழகத்தில் முதல்முறையாக பக்தர்கள் இன்றி தைப்பூசம்!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (07:47 IST)
தமிழகத்தில் முதல் முறையாக மற்றும் முருகன் கோயில்களில் பக்தர்கள் இன்றி தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று தைப்பூச நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பாக  தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது
 
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, உள்பட அறுபடை வீடுகளிலும் வடலூர் வள்ளலார் கோவில் உள்பட பல இடங்களில் இன்று தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்  காரணமாக தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவிலில் முதல்முறையாக பக்தர்கள் இன்றி மிக எளிமையாக தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது
 
மேலும் திருக்கல்யாண நிகழ்ச்சி, தேரோட்டம் ஆகியவையும் பக்தர்கள் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு இருப்பதால் பக்தர்கள் அதில் கண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments