Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் பதவி - குற்றாலம் டூ கோட்டை: தங்க தமிழ்செல்வன் பேட்டி!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (16:00 IST)
தமிழகத்தில் 18 சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 
 
இதனையடுத்து தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களின் சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் முடிந்து ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு கூறிவிட்ட நிலையில் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பு மட்டுமே பாக்கியுள்ளது.
 
இந்நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் தினகரன் உத்தரவின் பேரில் குற்றாலத்தில் உள்ள இசக்கி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தங்க தமிழ்செல்வன் பேட்டி அளித்தது பின்வருமாறு, இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல தீர்ப்பு வர இருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்தால் ஆட்சியை கலைக்க மாட்டோம், எங்களில் 18 பேரில் ஒருவர் முதல்வர் ஆவார். 
 
குற்றாலத்தில் தங்கியிருக்கிறோம், தகுதிநீக்க வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் நேரடியாக கோட்டைக்குத்தான் செல்வோம். தற்போது எங்களுடன் 20 பேர் உள்ளனர். மேலும் இருவர் வருவார்கள் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments