Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று! – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (08:52 IST)
சென்னை ராயபுரம் பகுதியில் 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



சமீப காலங்களில் நகரங்களின் பல பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் நாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயபுரம் பகுதியில் நாய் ஒன்று நேற்று ஒருநாளில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை கடித்ததால் பெரும் பரபரப்பு எழுந்தது.

மக்களை அச்சுறுத்தி வந்த அந்த நாய் பிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு ரேபிஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் நாயால் கடி வாங்கிய 27 பேரும் 5 டோஸ் தடுப்பூசிகள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாயை போலவே மற்ற நாய்களுக்கும் ரேபிஸ் தொற்று பரவியிருக்கலாம் என மக்களிடையே அச்சம் எழுந்துள்ள நிலையில் தெரு நாய்களிடையே ரேபிஸ் பரவுவதை கண்டறிந்து கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments