Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அரசின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது - எடப்பாடி பழனிசாமி

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (14:18 IST)
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துவிட்டது. போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு தவறிவிட்டது. திமுக அரசின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி தலைமையில் அதிமுக பொதுக்குழு இன்று நடந்து வரும் நிலையில், இன்றைய பொதுக்குழுவின் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ’’ தமிழ்நாடு அரசியலில் வரலாற்றில் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது அதிமுக. கொரொனா தொற்று காலத்திலும் சிறப்பாக செயல்பட்டது அதிமுக. 520 தேர்தல் வாக்குறுதிகளையும், திமுக  நிறைவேற்றவில்லை. நீதிமன்ற அறிவுறுத்தலுக்குப் பின்னும் அமைச்சரவை பதவி நீக்கம் செய்யாதது சரியில்லை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துவிட்டது. போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு தவறிவிட்டது. திமுக அரசின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தமிழகத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக அதிமுக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments