Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடித்து வெளுக்கும் கனமழை..! – எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (07:50 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதலாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சியால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதலாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நல்ல மழை பொழிந்த நிலையில் இன்றும் பல பகுதிகளில் காலையில் இருந்தே மழை தொடர்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடியற்காலை முதலாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ALSO READ: 62.66 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

அதுபோல, ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அந்தந்த பகுதிகளில் உள்ள கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துவிட்டு, பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 வீடுகளை அத்துமீறி சீல் வைத்த தனியார் நிதி நிறுவனம்.. மின்சாரத்தையும் கட் செய்ததால் பரபரப்பு..!

பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்ப காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு..

சரக்கை தண்ணீர் கலக்காமல் அடிப்பதாக சவால்! பாட்டில் பாட்டிலாக குடித்த இளைஞர் பரிதாப பலி!

தென்மேற்கு பருவமழை தொடங்குவது எப்போது? தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்..!

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments