Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றுடன் முடிகிறது நீதிமன்ற காவல்: அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்?

நீதிமன்ற காவல்
Webdunia
புதன், 28 ஜூன் 2023 (09:12 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சட்ட விரோதமாக பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார் 
 
கடந்த 14ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் நீதிமன்ற காவல் அவகாசம் முடிவடைகிறது. இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் நீடிக்கப்படுமா? அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது குறித்து இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தெரியவரும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments