Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறு... மீண்டும் நடக்காது; மன்னிப்பு கோரிய உதயநிதி: காரணம் என்ன?

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (12:27 IST)
சமீபத்தில் சென்னை வானகரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரை வரவேற்று சாலை நெடுக்கிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. 
 
அந்த பேனரில் இளவரசர் வருகிறார்.. எங்களின் இளவரசரே என்றெல்லாம் விதவிதமான வாசகங்களோடு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இதனை புகைப்படம் எடுத்து ஒரு உதயநிதியை குறிப்பிட்டு பதிவு ஒன்றை போட்டிருந்தார். 
 
அந்த பதிவு பின்வருமாறு, எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும் கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம் என ட்வீட் செய்திருந்தார்.
 
இதற்கு உதயநிதி, தவறு.. மீண்டும் நடக்காது! என பதிவிட்டார். இதற்கு திமுகவை சேர்ந்த பலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், உதயநிதி மன்னிப்பு கேட்பது இது முதல் முறையல்ல. 
 
ஒரு முறை திமுக பொதுக் குழு உறுப்பினர் கூட்டத்தின் போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் உதயநிதியின் படம் இடம் பெற்றிருந்தது. அப்போது முன்னணி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம் பெற உங்க தகுதி என்ன? என கேட்டிருந்தபோது தவறு... மீண்டும் நடக்காது என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments