Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் மகனும் தேர்தலில் போட்டியா? பிரேமலதா சொல்வது என்ன?

Siva
வியாழன், 8 பிப்ரவரி 2024 (08:57 IST)
திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கூட்டணிகளிலும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் கிட்டத்தட்ட திமுக கதவை அடைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். 
 
திமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் அப்படியே இருப்பதால் அங்கு இடமில்லை என்பதால் தேமுதிக அந்த கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. 
 
தேமுதிக 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி என்ற நிபந்தனையுடன் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் 14 தொகுதிகளை அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே கொடுக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அதிமுக தரப்பிலும் பாஜக தரப்பிலும் மூன்று தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்றும் பாஜக,  ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் அதிகபட்சமாக தேமுதிகவுக்கு மூன்று தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில் பிரேமலதா, அவருடைய மகன் விஜயபிரபாகர்ன் மற்றும் சகோதரர் சுதீஷ் ஆகிய மூன்று பேர்கள் மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுவதால் தேமுதிகவும் குடும்ப கட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments