Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் முதல் ஐயப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் - விடியோ

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (16:33 IST)
கரூர் மாவட்டம், இலாலாபேட்டையை அடுத்த அருகே கருப்பத்துார் காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலானது தமிழ்நாட்டில் முதலாவதாக அமைந்த ஐயப்பன் கோவிலாகும். 

 
1965ம் ஆண்டில் ஸ்ரீலஸ்ரீ விமோசனாநந்த குருமகராஜ் அவர்களால் நிர்மாணிக்கபட்ட இத்திருகோவிலில் கடந்த 24ந்தேதி முதல் தொடர்ந்து யாகங்கள் பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றது. வேதமந்திரங்கள் முழங்க, இன்று காலை கோயில் கும்பத்திற்கு புனித காவிரி நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியை காண, கரூர் மாவட்டம் மட்டுமில்லாது, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு, கும்பாபிஷேக தீர்த்த நீரைப்பெற்று அருள்மிகு சுவாமி ஐயப்பனை வழிபட்டனர். மேலும், பாதுகாப்பு பணிக்காக, இலாலாபேட்டை மற்றும் குளித்தலை போலீஸார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர்.
- சி. ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

இந்த ராசிக்காரர்களுக்கு நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (13.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments