Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தொடரில் இருந்து திடீரென விலகிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:58 IST)
இந்திய தொடரில் இருந்து திடீரென விலகிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!
நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விளையாடி வரும் நிலையில் அதை முடித்துவிட்டு அடுத்ததாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. 
 
ஜனவரி 18ஆம் தேதி முதல் இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது என்பதும் அதனை அடுத்து டி20 ஆட்டங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் தொடரில் இடம் பெற்றுள்ள ஆடம் மில்னே என்பவர் இந்திய தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அடுத்தடுத்து போட்டிகளில் விளையாட தான் விரும்பவில்லை எனவும் சற்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததை அடுத்து அவர் இந்திய தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து அவருக்கு பதிலாக பிளேக் டிக்னர் என்பவர் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments