Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதெல்லாம் கொஞ்சம் அதிகம்… ரஹானே, புஜாராவுக்கு ஆதரவாக முன்னாள் வீரர்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:17 IST)
ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் டெஸ்ட் அணியில் இடம்பெறாதது குறித்து மூத்த வீரர் அஜய் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் மோசமான பார்மில் இருந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் பங்களிப்புக்காக அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா தொடரின் தோல்விக்குப் பிறகு இப்போது அணியின் தலைமை ரோஹித் ஷர்மாவிடம் சென்றுள்ளது.

இந்நிலையில் அடுத்த டெஸ்ட் தொடரில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் கழட்டிவிடப்பட்டுள்ளனர். அணியில் பல இளம் வீரர்கள் காத்திருப்பதால் இனிமேல் அவர்கள் இருவரும் அணிக்குள் வருவது கடினம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ‘அவர்களின் நீக்கம் வருத்தமாக உள்ளது. இருவரும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடும் வீரர்கள். அவர்களை அணியில் இருந்து நீக்கிவிட்டால் மீண்டும் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அடுத்த தலைமுறை வீரர்கள் அவர்களை தள்ளிவிட்டனர்.கிர்க்கெட்டில் பலருக்கு அவர்கள் விரும்பிய வகையில் ஓய்வு பெற வாய்ப்புக் கிடைத்ததில்லை. அது இப்போதும் தொடர்கிறது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments