Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை என்றால் வீரர்கள் சம்பளம் கட்: கங்குலி!

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (17:40 IST)
ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்றால் வீரர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என தகவல். 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 
 
இதனால் மார்ச் மாதம் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் ஏப்ரலிலும் ஊரடங்கு தொடர்ந்ததால் மறு அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் போட்டிகள் குறித்து அறிவிப்பு வெளியாகாது என கூறப்பட்டது.
 
இந்நிலையில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஐபிஎல் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்த நிலையில் பிசிசிஐ சூழ்நிலை காரணமான இதனை நிராகரித்தது. தற்போது இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்றால் வீரர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலில் தெரிவித்துள்ளார். 
 
அவர் விரிவாக கூறியதாவது, ஐபிஎல் போட்டிகள் நடத்தவில்லை என்றால் ரூ.4,000 கோடிக்கு நஷ்டம் ஏற்படும். இதனை சமாளிக்க வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அப்படி போட்டி நடந்தால் இதுபோன்ற பிடித்தங்கள் இருக்காது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments