Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜாரா விக்கெட்டை இழந்த இந்தியா… தொடக்கமே அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:19 IST)
இந்திய அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாராவின் விக்கெட்டை இழந்துள்ளது.

இந்திய அணி பாலோ ஆன் ஆனாலும் இங்கிலாந்து அணியே தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியை 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியுள்ளது. இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் அற்புதமாக பந்து வீசி 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணிக்கு 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஆட்டமுடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை சேர்த்துள்ளது. இன்று ஐந்தாம் நாளில் வெற்றிக்கு 381 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி அட்டம் தொடங்கிய சற்று நேரத்திலேயே சுவர் போல நின்று விளையாடக் கூடிய சத்தேஷ்வர் புஜார விக்கெட்டை இழந்துள்ளது. அதன் பின்னர் களத்துக்கு வந்த கோலி சுப்மன் கில்லோடு இணைந்து விளையாடி வருகிறார். இந்திய அணி தற்போது வரை 2 விக்கெட்களை இழந்து 91 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments