Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் மகன் வீழ்த்திய முதல் விக்கெட்: தொடங்கியது சாதனை

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (19:18 IST)
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். மலைபோல் உள்ள இவரது சாதனையை முறியடிப்பது அவ்வளவு சாதாரணம் இல்லை என்பதை கிரிக்கெட் விமர்சகர்களே ஒப்புக்கொள்வர். இந்த நிலையில் பேட்டிங்கில் கிங் என்று பெயரெடுத்த சச்சினின் வாரிசான அர்ஜூன் தெண்டுல்கர் பவுலிங்கில் அசத்தி வருகிறார். உள்ளூர் மற்றும் 16 வயதுக்குரிய அணிகளில் விளையாடிய அர்ஜூன் தெண்டுல்கர் முதல்முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
 
 
அர்ஜூன் தெண்டுல்கர் தற்போது இலங்கைக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணியில் விளையாடி வருகிறார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அர்ஜூன் தெண்டுல்கர் 11 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். மேலும் அவர் இரண்டு மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணிக்காக அர்ஜுன் தெண்டுல்கர் வீழ்த்திய முதல் விக்கெட் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் சச்சின் புரிந்த நிலையில் அவருடைய மகன் இன்று, முதல் விக்கெட்டை வீழ்த்தி தனது சாதனையை தொடங்கியுள்ளார். இவரது சாதனை சச்சின் சாதனையையும் விஞ்சுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments