Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இறுதி போட்டிக்கு செல்ல இந்தியா என்ன செய்ய வேண்டும்?

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (18:00 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் வரும் 5-ஆம் தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற உள்ளது 
 
இந்த தொடரில் கிடைக்கும் முடிவை பொறுத்தே உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது. இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர் டிரா ஆனால் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும். அதேபோல் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றாலும் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் 
 
அதேபோல் இங்கிலாந்து அணி 1-0 அல்லது 2-0 அல்லது 2-1 என்ற கணக்கில் வென்றாலும் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை இந்திய அணி 2-0 அல்லது அதைவிட அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இங்கிலாந்து அணி இந்தியாவை 3-0, அல்லது 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் வென்றால் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இறுதிப் போட்டியை நிர்ணயம் செய்யும் இந்தியா இங்கிலாந்து தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments