Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையின் பெயரை அறிவித்த ஆலியா பட்- ரன்பீர் கபூர் தம்பதிகள்!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (09:21 IST)
இந்தி நடிகை ஆலியா பட்டிற்கும், ரன்பீர் கபூருக்கும் திருமணமான நிலையில் அவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆல்யா பட். இவர் இந்தி தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடந்தது.

பின்னர் சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆல்யா பட் தெரிவித்தார், சமீபத்தில்தான் ஆல்யா பட்டின் வளைகாப்பு சிம்பிளாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் ஆல்யா பட் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து இப்போது குழந்தைக்கு – ராஹா என்ற பெயரை தம்பதிகள் சூட்டியுள்ளனர். இதை சமூகவலைதளம் மூலமாக ஆலியா பட் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’என் இதயம் நிரம்பிவிட்டது..” – சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி படம் பார்த்துப் புகழ்ந்த பிரபலம்!

மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் ‘கேங்கர்ஸ்’… ஒரு வாரக் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

அளவுக்கதிகமான வன்முறை… இருந்தும் கொண்டாடும் ரசிகர்கள்… நானியின் ‘ஹிட் 3’ முதல் நாள் வசூல் இவ்வளவா?

“என்னுடைய சில படங்கள் எனக்குக் குற்றவுணர்ச்சியைக் கொடுத்தன… அதற்குப் பிராயச்சித்தமாக…” அஜித் பதில்!

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான ‘டூரிஸ்ட் பேமிலி’… முதல் நாள் வசூல் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments