Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீடூவால் டேமேஜ் ஆன பெயர்; வைரமுத்து செய்த வேலை; கிண்டலடிக்கும் சின்மயி

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (12:32 IST)
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இன்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுகளைத் தெரிவித்திருந்த நிலையில் சின்மயி அதனை கிண்டலடித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசால் ஆதரவளிக்கப்படுவதாக சொல்லப்படும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பு இந்திய ராணுவ வீரர்கள் செல்லும் வாகனத்தின் மீது நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இதையடுத்து பாகிஸ்தான் எல்லையில் விமானப்படையின் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாத அமைப்புகளின் கூடாரங்கள் அழிக்கப்பட்டது.

அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கும் இந்திய அரசிற்கும் பல்வேறு இடங்களில் இருந்து வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

கவிஞர் வைரமுத்துவும் தாக்குதல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ’'போர்மீது விருப்பமில்லை.ஆனால், தீவிரவாதத்தின் மீதுதீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த சின்மயி தனது டுவிட்டரில் மீடுவிற்கு முன்னர் வைரமுத்து கஜா புயல், சென்னை வெள்ளம் உள்ளிட்ட சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. முந்தைய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றியும் ஒன்னும் சொல்லவில்லை.

ஆனால் தற்பொழுது மீடுவால் தனது பெயர் டேமேஜானதற்கு பின்னர், தனது பெயரை மீட்டெடுக்க இவர் இப்படி செய்கிறார் என  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments