Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவோடு படம் பண்ணுங்க ப்ரோ – ரசிகரின் கேள்விக்கு திரௌபதி இயக்குனரின் பதில்!

சிம்பு
Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (08:33 IST)
திரௌபதி இயக்குனரிடம் ரசிகர் ஒருவர் சிம்புவோடு இணைந்து படம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத நடிகர் நடிகைகள் மற்றும் இதுவரை வெளியே தெரியாத இயக்குனர் என குறைந்த பட்ஜெட்டில் உருவான திரௌபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 330 திரைகளில் வெளியான இந்த படம் இதுவரை 14 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வருடம் வெளியானப் படங்களில் மிகப்பெரிய வெற்றி படம் என்றால் அது திரௌபதி திரைப்படம்தான் எனக் கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.இதனால் அந்த இயக்குனரின் அடுத்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மீண்டும் திரௌபதி படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட்டுடன் மீண்டும் இணைவதை இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் சமூகவலைதளத்தில் சிம்புவுடன் இணைந்து நீங்கள் ஒரு படம் செய்தால் மாஸாக இருக்கும் என தனது ஆசையை வெளிப்படுத்தினார். அவருக்குப் பதிலளித்துள்ள மோகன் ‘சிம்பு ரெடி என்றால் நானும் ரெடி…என்னுடைய அடுத்தப் படத்தை முடித்துவிட்டு அதன் பின் சிம்புவிடம் செல்வேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments