Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ரஜினி கதை தயார் பண்ண சொல்லி இருக்கிறார்…” சீக்ரெட் உடைத்த மலையாள நடிகர்!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (18:00 IST)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ், இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக உள்ளார். தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ள அவர் இயக்குனராகவும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மோகன்லால் நடிப்பில் உருவான லூசிபர் மற்றும் ப்ரோ டாடி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த இரு படங்களும் கவனம் பெற்ற நிலையில் இப்போது அவர் அடுத்து TYSON என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளார். இந்த படத்தை கேஜிஎஃப் மற்றும் சலார் ஆகிய திரைப்படங்களை தயாரித்து, இன்று இந்தியாவின் கவனிக்கப்படும் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அவர் நடித்துள்ள கடுவா என்ற திரைப்படம் ரிலீஸாவதை ஒட்டி சென்னையில் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டார். அப்போது பேட்டி அளித்த அவர் “ ரஜினி சார் என்னிடம் ஒரு கதை தயார் செய்ய சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன். நான் அவரின் மிகப்பெரிய ரசிகன். அதனால் எந்த குழப்பமும் இல்லாமல் ஒரு கதை அமைந்தால் மட்டுமே அவரை சந்திப்பேன்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments