Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குணச்சித்திரை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ரங்கம்மாள் பாட்டி காலமானார்!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (18:56 IST)
சினிமாவில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ரங்கம்மாள் பாட்டி இன்று உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த கி.மு என்ற படத்தில், ஒரு நகைச்சுவை காட்சியில் ரங்கம்மாள் பாட்டி, போறது தான் போற அப்படியே அந்த நாய சூன்னு சொல்லிட்டு போப்பா எனச் சொல்லி வடிவேலுவை நாயிடம் கடிவாங்க வைப்பார்…. இந்த காட்சியில் தத்ரூபமாக    நடித்த அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர், சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் சிறுவயதில் நாடகங்களில் நடித்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த இவர், எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான விவசாயி என்ற படத்தில் அறிமுகம் ஆனார். முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்துள்ள ரங்கம்மாள் பாட்டி, சமீப காலமான உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில்,  அன்னூரில் உள்ளா அவரது வீட்டில் இன்று மரணம் அடைந்தார்.

அவர் இதுவரை 500க்கும் அதிகமான படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அனிருத்தை கடத்திட்டுப் போய்.. அரண்மனையில வெச்சு..!?- விஜய் தேவரகொண்டாவின் ஆசை!

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments