Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'டிட்வா' புயல் பாதிப்பு: கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் உணவின்றி தவிப்பு

Advertiesment
Flight

Mahendran

, சனி, 29 நவம்பர் 2025 (10:29 IST)
'டிட்வா' புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, சென்னைக்கான விமானச் சேவைகள் கடந்த மூன்று நாட்களாக முடங்கியுள்ளன. இதனால், கொழும்பு விமான நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட இந்திய பயணிகள் உணவின்றி தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொழும்பு வழியாக இந்தியா திரும்ப இருந்த 150 தமிழர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இதில் அடங்குவர். கனமழையால் இலங்கையில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விமான நிலையத்திலும் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
 
சென்னைக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதே இவர்களின் தவிப்புக்கு முக்கிய காரணமாகும். விமான நிலையத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுன் ரூ.95,000-ஐ தாண்டியது!