Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் 2 வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிட்டு கொலை -மனித உரிமைகள் குழு

Webdunia
திங்கள், 8 மே 2023 (18:27 IST)
ஈரான் நாட்டில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டில்  பேரதிபர் அயத்தொல்லாஹ் அலி கமெய்னி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஈரான் நாட்டில் குற்றச்செயல்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதை மனித உரிமை அமைப்புகள் கண்டித்து வருகின்றன.

இதுதொடர்பாக அந்த நாட்டில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் 194 பேரை தூக்கிலிட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகளை தூக்கிலிட்டுள்ளனர்.  போதைப் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது  செய்யப்பட்ட இவர்களில் பாதிப்பேர் பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்த நாட்டில் 82 கைதிகளை தூக்கிலிட்டுள்ளனர் என்று ஐ.எச்.ஆர் அமைப்பு கூறியுள்ளது. அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டில் 333 கைதிகளை தூக்கிலிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments