Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்...! பதறி ஓடிய பொதுமக்கள் !

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (16:51 IST)
இந்தோனேசியாவில் சற்றுமுன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டு மக்கள் பதறி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த நிலையில் சற்றுமுன் இந்தோனேசியாவில் 6.4 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
 
இந்தோனேசியாவில் உள்ள மலுகு என்ற மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து கட்டிடங்கள் குலுங்கியதால் அந்த பகுதி மக்கள் பதறி ஓடியதாகவும் கூறப்படுகிறது. 
 
இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்படவில்லை என்றும் இந்த நிலநடுக்கத்தினால் சேத விவரம் எதுவும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments