Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை கொல்ல முயன்ற பூனை; கைது செய்ய துடிக்கும் போலீஸார்

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2017 (14:33 IST)
ஜப்பானில் மூதாட்டி ஒருவரை பூனை கொலை செய்ய முயன்றதையடுத்து தலைமறைவான பூனையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


 

 
ஜப்பான் டோக்கியோ நகரில் மயாகோ மாட்சுமோட்டா என்ற 80 வயது நிரம்பிய மூதாட்டி தனது மகளுடன் வசித்து வருகிறார். மகள் வெளியே சென்று வீடு திரும்பியபோது மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே மகள் தனது தாயை மருத்துவமனையில் அனுமதித்தார். 
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த பெண் வீட்டை விட்டு வெளியே சென்றபோது கதவை வெளியே பூட்டிவிட்டு சென்றுள்ளார். காவல்துறையினர் நடத்திய சோதனையில் புதிய மனிதர்களின் கைரேகை எதுவும் வீட்டில் பதியவில்லை.
 
மருத்துவமனையில் நினைவு திரும்பிய மூதாட்டி பூனை என்று கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வீட்டில் இருந்த பூனை மீது சந்தேகப்பட்டுள்ளனர். மேலும் மூதாட்டியின் முகத்தில் இருந்த கீறல்கள் அனைத்தும் பூனையின் நக கீறல்கள்.
 
சம்பவத்திற்கு பிறகு அந்த பூனை வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டது. இதனால் காவல்துறையினர் தற்போது அந்த பூனையை தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த மூதாட்டிக்கு நினைவு திரும்பிய பின்னரே கொலை முயற்சி சம்பவம் குறித்து தெளிவான விளக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments