Publish Date: Fri, 27 Aug 2021 (16:40 IST)
Updated Date: Fri, 27 Aug 2021 (16:43 IST)
ஆப்காஸ்னிஸ்தானை தாலிபான்களை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து இந்தியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல காபூர் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நேற்று இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்ற நிலைய்ட்ல் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 12 பேர் அமெரிக்க ராணுவ வீரர்கள். 60 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். சுமார் 150க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்க நேற்று குற்றம்சாட்டியது போல் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு ஐஎஸ்.ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேலும்,இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூறும் வகையில் ஆகஸ்ட்30 ஆம் தேதி மாலை வரை அமெரிக்க தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.