Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளத்தில் நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம்: வீடுகள் இடிந்து 6 பேர் உயிரிழப்பு

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (07:59 IST)
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேபாளத்தில் உள்ள டோட்டி என்ற மாவட்டத்தில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதில் வீடு இடிந்து விழுந்து 6 பேர் வரை உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து விரைவில் தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது டெல்லியிலும் சுமார் 15 விநாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments