Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1953 ஆம் ஆண்டுக்கு பின் இணைந்த இரு துருவங்கள்....

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (11:34 IST)
கொரியப்போர் கடந்த 1953 ஆம் ஆண்டு முடிந்த பின்னர் வட கொரியாவிற்கு தென் கொரியாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் இருந்து வந்தது. த்ற்போது இரு துருவங்களும் இணைந்துள்ளது. 

 
 
இரு கொரிய நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், வடகொரியா நடத்தி வந்த தொடர் ஆணு ஆயுத சோதனை இந்த மோதல் போக்கை அதிகரிக்க செய்தது. ஆனால், தென் கொரியாவின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தின. 
 
வடகொரியா இறங்கி வந்தது. தென் கொரியாவும் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கவும் முன்வந்தது. இதையடுத்து இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக்குழுவினர் சந்தித்து பேசினர். 
 
தற்போது, வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் உச்சி மாநாட்டில் சந்தித்து பேச வடகொரிய தலைவர் தென்கொரியா சென்றுள்ளார். 
 
திட்டமிட்டபடி மாநாடு இன்று தொடங்கியது. இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது. 
 
கொரிய போருக்கு பின்னர் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்துக்கொள்வது இதுவே முதல் முறையாகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments