Publish Date: Wed, 21 Dec 2022 (09:30 IST)
Updated Date: Wed, 21 Dec 2022 (09:32 IST)
பங்குச்சந்தை நேற்று திடீரென சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் பங்கு சந்தையில் நல்ல முன்னேற் றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று சுமார் 250 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது என்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. அதேபோல் நிப்ட் 75 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது
சற்று முன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 61940 எனவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 18,455 என்ற பள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய நாள் முழுவதும் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.