Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை நிலவரம் என்ன? நிப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!

Advertiesment
share

Siva

, திங்கள், 19 மே 2025 (09:47 IST)
பங்குச்சந்தை கடந்த வாரம் நல்ல ஏற்றத்தில் இருந்த நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்ற-இறக்கமின்றி மிகக் குறைந்த சரிவில் வர்த்தகமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், 113 புள்ளிகள் குறைந்து 82,230 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி வெறும் 19 புள்ளிகள் மட்டும் குறைந்து 25,000 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, கோடக், மகேந்திரா வங்கி, சன் பார்மா, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, சிப்லா, எச்.சி.எல் டெக்னாலஜி, இண்டஸ் இண்ட் வங்கி, இன்போசிஸ், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் சார்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!