Publish Date: Thu, 27 Oct 2022 (10:08 IST)
Updated Date: Thu, 27 Oct 2022 (10:10 IST)
தீபாவளி வரை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் அதிக அளவில் ஏற்றம் இருந்ததால் கிட்டத்தட்ட 60 ஆயிரம் புள்ளிகளை சென்செக்ஸ் நெருங்கியது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தீபாவளிக்குப் பின்னர் இன்று மீண்டும் பங்குத்தந்தை தொடங்கியுள்ள நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து 59 ஆயிரத்து 820 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருவதால் இன்று மாலைக்குள் 60 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 17741 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றம் பெற்று வருவது அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது