Publish Date: Thu, 20 Oct 2022 (09:24 IST)
Updated Date: Thu, 20 Oct 2022 (09:26 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் பின்னர் திடீரென இன்று பங்குச் சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 165 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 933 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை 60 புள்ளிகள் குறைந்து 17450 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று குறைந்தாலும் மதியத்திற்கு பின் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது