Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி!

Siva
திங்கள், 4 மார்ச் 2024 (11:00 IST)
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 9.64 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9.64 லட்சம் ம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் ராகுல் காந்தி இன்று இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்

பொய் வாக்குறுதிகள் கொடுத்து பிரதமர் ஆனவரின் அலுவலகத்திலேயே பல முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணியிடங்களை ஒரு சுமையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி கருதுவதாகவும் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்

தொடர்ச்சியாக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது என்றும் அரசு பணியிடங்கள் இளைஞர்களின் உரிமை என்றும் அவை நிரப்புவதற்கு வலுவான திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

இந்தியா கூட்டணி பொறுப்பேற்றதும் அரசு பணியிடங்கள் என்ற மூடப்பட்ட கதவுகளை இளைஞர்களுக்காக திறந்து வைப்போம் என்றும் வேலை வாய்ப்பின்மை என்ற இருளிலிருந்து இளைஞர்களை நாங்கள் காப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments