Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை: சீர்காழியில் பரபரப்பு

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (15:03 IST)
நாகை மாவட்டம் சீர்காழி திரிபுரசுந்தரி நகரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(45) அதிமுக கொள்ளிடம் ஒன்றிய மாணவரணி செயலாளர். மேலும் காண்ராக்டர் தொழிலிலும் ஈடுபட்டு வந்த இவர் அதிமுகவின் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் மற்றும் எஸ்பி வேலுமணிக்கு  நெருங்கிய நண்பராக இருந்தார்.



இந்நிலையில் இன்று காலை 11:30 மணிக்கு சீர்காழி வடக்கு வீதியில் ஒருவரை சந்தித்துவிட்டு தனது காரில் ஏறும் போது, காரில் வந்த மர்மகும்பல் ஒன்று ரமேஷ்பாபு மீது அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் தலை முற்றிலும் சிதைந்த நிலையில் ரமேஷ்பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சீர்காழி டிஎஸ்பி சேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ்பாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்,

இச்சம்பவத்தை தொடர்ந்து கலவரம் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ரமேஷ்பாபுவுக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments