Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருத்துக் கணிப்புகள் பொய்.. எங்களுக்கு தான் தார்மீக வெற்றி கிடைத்துள்ளது: ப சிதம்பரம்

Mahendran
வெள்ளி, 7 ஜூன் 2024 (17:46 IST)
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில் மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம் அதில் மோடிக்கு என்ன பிரச்னை? தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது.  தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் ப சிதம்பரம் கூறினார்.
 
மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தை செம்மை படுத்த வேண்டும் என்றும், விவிபேட் இயந்திரத்தில் இருந்து வரும் ஒப்புகை தாளை, வாக்காளர்கள் எடுத்து பார்த்துவிட்டு பெட்டியில் போடலாம் என்பது தான் காங்கிரசின் கோரிக்கை என்றும், இன்னுமும் மக்கள் ஈவிஎம் இயந்திரத்தை சந்தேகிக்க தான் செய்கிறார்கள் என்றும் ப சிதம்பரம் தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments