Publish Date: Wed, 15 Feb 2023 (08:05 IST)
Updated Date: Wed, 15 Feb 2023 (08:07 IST)
மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசின் மின்சார துறை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது என்பதும் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது தெரிந்ததே.
டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என முதலில் கூறப்பட்டிருந்த நிலையில் அதன் பின் ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு மீண்டும் பிப்ரவரி 15ஆம் தேதி வரை அந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என்பதால் இன்றுக்குள் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இனி கால அவகாசத்தை நீடிக்க வாய்ப்பு இல்லை என மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதை அடுத்து இதுவரை இணைக்காதவர்கள் உடனடியாக இன்றுக்குள் ணைக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.