Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேராசிரியர்கள் மாணவிகளை வீட்டிற்கு அழைக்கக்கூடாது – சென்னை பல்கலைகழகம் அதிரடி

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (14:08 IST)
கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் நடைபெறும் பாலியல் அத்துமீறலை தடுக்கவும், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவும் புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது சென்னை பல்கலைகழகம்.

சென்னை பல்கலைகழகம் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில் பல்கலைகழகத்தில் மாணவிகள் மீது பாலியல் அத்துமீறலில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைகழகத்தின் அனுமதியின்றி பேராசிரியர்களுடன் மாணவிகள் சுற்றுலா செல்ல கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அதுபோல பேராசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவிகளை வீட்டிற்கு அழைக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேராசிரியர்களோடு வெளியே செல்லுதல், அவர்கள் வீட்டில் தங்குதல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை பேராசிரியர்களோடு வெளியே செல்ல வேண்டிய அவசியம் எழும் பட்சத்தில் பல்கலைகழகத்தில் முன்னரே அனுமதி வாங்க வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களிலும் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்