Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திலயே பேசுறார்.. ஒண்ணும் புரியல! – மேனேஜரால் கடுப்பான பொதுமக்கள்!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (11:39 IST)
புதுக்கோட்டை அருகே உள்ள இந்திய வங்கி கிளையின் மேலாளர் இந்தியில் பேசுவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறையில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளர் இந்தி மட்டுமே தெரிந்தவர் என்பதால் வாடிக்கையாளர்களிடம் இந்தியில் பேசியுள்ளார். அவர் பேசுவது புரியாமல் பொதுமக்களும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

இதனால் பொறுமையிழந்த மக்கள் வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கி மேலாளர் பேசும் இந்தி புரியவில்லை என்றும், இதனால் கடந்த 10 மாத காலமாக தங்களால் கிசான் கார்டு பெற முடியவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு தற்போது வலு பெற்று வரும் நிலையில் இந்தியில் பேசுவதால் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments