Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 16 June 2025
webdunia

உமா மகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் எங்கே? கொலை வழக்கின் க்ளூ அவரா?

Advertiesment
உமா மகேஷ்வரி
, வெள்ளி, 26 ஜூலை 2019 (16:11 IST)
உமா மகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் தலைமறைவாகியுள்ளது போலீஸாருக்கு சந்தேகத்தை தூண்டியுள்ளது. 
 
முன்னாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பெண் என 3 பேரையும் மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இதனால் நெல்லை பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.   
 
இந்நிலையில் உமா மகேஸ்வரியை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. உமா மகேஷ்வரியின் வீட்டில் சிசிடிவி இல்லை என்பதால் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். 
உமா மகேஷ்வரி
அந்த வகையில் சீனியம்மாள் என்னும் திமுக பிரமுகருக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் அதுவும் இல்லை என ஆகிவிட்டது. எனவே, போலீஸார் மறுபடியும் துப்பு தேடி வருகின்றனர். 
 
அதே நேரத்தில் கொல்லப்பட்ட பணிப்பெண் மாரி, உமா மகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் அல்ல என்றும் அவரது மகள் கிருத்திகா வீட்டிற்கு வேலைகளை கவனித்து வந்தவர் என்றும் கூறப்படுகின்றது. 
 
உமா மகேஸ்வரியின் வீட்டு வேலைக்காரி சம்பவ தினத்தில் இருந்து மாயமாகி விட்டதாக கூறப்படுகின்றது. அது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடித்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கேரட் வைரம் – கேரட்டில் இருந்த தொலைந்த மோதிரம்