Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வக்ஃப் வாரிய சட்டத்திற்கு எதிராக கடையடைப்பு! வெறிச்சோடிய சாலைகள்!

Prasanth Karthick
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (10:27 IST)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இன்று வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாத் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

 

இதனால் மேலப்பாளையம் முழுவதும் சுமார் 1200க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தங்கம் விலை உயர்ந்ததற்கு பிரதமர் மோடி தான் காரணம்.. சித்தராமையா

இம்ரான்கான் சகோதரிகள் மூவர் அதிரடி கைது.. என்ன காரணம்?

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

ஜனாதிபதிக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு.. அவசர சட்டம் கொண்டு வருகிறதா மத்திய அரசு?

அடுத்த கட்டுரையில்
Show comments