Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுடன் விஷால் சந்திப்பு!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (06:54 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 'இளையராஜா 75' என்ற இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பட்டிருந்த தடையை நேற்று நீதிமன்றம் நீக்கிவிட்டதை அடுத்து இந்த நிகழ்ச்சி நடைபெறுவது உறுதியாகிவிட்டது.
 
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் முக்கிய பிரபலங்களை இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அளித்தார்.  இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக துணைமுதல்வரும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், மனோஜ்குமார் ஆஅகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments