Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராடி 256 ரன்கள் குவித்த இந்திய அணி

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (20:43 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
ஆரம்பத்திலே தொடக்க வீரர் ரோகித் சர்மா 2 ரன்களில் வெளியேற இந்திய அணி தடுமாற தொடங்கியது. ரோகித்தை தொடர்ந்து தவான், தினேஷ் கார்த்திக் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய கேப்டன் கோஹ்லி அரைசதம் விளாசினார்.
 
கேப்டன் கோஹ்லியும் களத்தை விட்டு வெளியேற விக்கெட்டு சரியாமல் அணியை தோனி மட்டும் தனியாக நின்று மீட்டெடுத்தார். தோனியும் அவுட்டாகி வெளியேற கடைசியில் சர்துல் தாகூர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணிக்கு தேவையாக ஸ்கோரை பெற்றுக்கொடுத்தனர்.
 
இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது. இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments