Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசைக்கான கட்டுப்பாடுகள் சினிமாவில் அதிகம்: ஏ.ஆர்.ரகுமான்

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (10:55 IST)
புதிய மற்றும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான அறிமுக நிகழ்சசி மும்பையில் நடந்தது.


இதில் அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு பேசுகையில்:-
 
“யூடியூப்பில் நான் சிறப்பான தனி இசைப்பாடல்களை கேட்டு இருக்கிறேன். அந்த பாடல்களை உருவாக்கிய இசை கலைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அந்த எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். ஆங்கில இசை கலைஞர்களையும், தனி இசை  கலைஞர்களையும் ஆதரிக்க வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும். தனி இசை கலைஞர்களுக்கான சந்தையை ஏற்படுத்த வேண்டும். தனி  இசைப்பாடல் திரைப்படத்தில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறேன். 
 
மக்கள் சிந்தனை சிறிய வட்டத்துக்குள் இருக்கக்கூடாது. அவர்கள் கற்பனை தூண்டப்பட வேண்டும். அது நடக்க வேண்டும் என்றால்  கட்டுப்பாடு, விதிமுறைகள் இருக்கக்கூடாது. திரைப்படங்களில் இடம்பெறும் இசை சிறப்பானது. ஆனாலும் நடிகர், நடிகை, கதை, இயக்குனர்  என்று இசைக்கான கட்டுப்பாடுகள் அங்கு அதிகம். ஆனால் தனி இசையில் அப்படி இல்லை. அங்குள்ள கற்பனைக்கு எல்லை கிடையாது.”  இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

கமல் & அன்பறிவ் கூட்டணி படத்தில் இருந்து வெளியேறிய லைகா.. பின்னணி என்ன?

இன்று பூஜையோடு தொடங்கும் ‘சூர்யா 46’ படம்..!

7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது?.. அப்டேட் கொடுத்த செல்வராகவன்!

கங்கை அமரனுக்கு வயித்தெரிச்சலா?... ஜி வி பிரகாஷுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments